வேதே3ஷு யஞ்ஞேஷு த1ப1:ஸு சை1வ
தா3னேஷு யத்1பு1ண்யப3லம் ப்1ரதி3ஷ்ட1ம் |
அத்1யேதி1 த1த்1ஸர்வமித3ம் விதி3த்1வா
யோகீ3 ப1ரம் ஸ்தா2னமுபை1தி1 சா1த்3யம் ||28||
வேதேஷு-—வேதங்களைப் படிப்பது; யஞ்ஞேஷு--—யாகங்களைச் செய்வது; தபஹ்ஸு----எளிமையை கடைப்பிடிப்பதுகடைப்பிடிப்பதுகடுமைகளில்; ச-—மற்றும்; ஏவ--—நிச்சயமாக; தானேஷு--—தானம் செய்வது; யத்--—எது; புண்ய-ஃபலம்—--புண்ணியங்களின் பலன்; ப்ரதிஷ்டம்--—பெற்றது; அத்யேதி--—அப்பாற்பட்டது; தத் ஸர்வம்--—அனைத்தும்; இதம்--—இதை; விதித்வா-—-அறிந்த; யோகீ--—ஒரு யோகி; பரம்--—உயர்ந்த; ஸ்தானம்--—உறைவிடம்; உபைதி--—அடைகிறார்; ச-—மற்றும்; ஆத்யம்--— மூல முதலான
BG 8.28: இந்த ரகசியத்தை அறிந்த யோகிகள், வேதச் சடங்குகள், வேதங்களைப் படிப்பது, யாகங்கள் செய்தல், துறவுகள் மற்றும் தானங்கள் ஆகியவற்றின் பலன்களுக்கு அப்பாற்பட்ட தகுதியைப் பெறுகிறார்கள். அத்தகைய யோகிகள் உயர்ந்த இருப்பிடத்தை அடைகிறார்கள்.
வேதே3ஷு யஞ்ஞேஷு த1ப1:ஸு சை1வ
தா3னேஷு யத்1பு1ண்யப3லம் ப்1ரதி3ஷ்ட1ம் |
அத்1யேதி1 த1த்1ஸர்வமித3ம் விதி3த்1வா
யோகீ3 ப1ரம் ஸ்தா2னமுபை1தி1 சா1த்3யம் ||28||
இந்த ரகசியத்தை அறிந்த யோகிகள், வேதச் சடங்குகள், வேதங்களைப் படிப்பது, யாகங்கள் செய்தல், துறவுகள் மற்றும் தானங்கள் ஆகியவற்றின் பலன்களுக்கு அப்பாற்பட்ட தகுதியைப் பெறுகிறார்கள். அத்தகைய யோகிகள் …
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
நாம் வேத யாகங்களைச் செய்யலாம், அறிவைக் குவிக்கலாம், தர்ப்பணம் செய்யலாம், தொண்டுகளுக்கு தானம் செய்யலாம், ஆனால் நாம் கடவுள் பக்தியில் ஈடுபடும் வரை, நாம் இன்னும் ஒளியின் பாதையில் இல்லை. இவ்வுலக நற்செயல்கள் அனைத்தும் பொருள் வெகுமதிகளை விளைவிக்கிறது, அதே சமயம் கடவுள் பக்தி பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கு வழிவகுக்கிறது. ராமாயணம் கூறுகிறது:
நேம த4ர்ம ஆசா1ர த1ப ஞான ஜக்ய ஜப தா3ன,
பே4ஷஜ பு1னி கோ1டி1ன்ஹ நஹின் ரோக3 ஜாஹின் ஹரிஜான
‘நீங்கள் நன்னடத்தை, ஸன்மார்க்கம், துறவு, தியாகங்கள், அஷ்டாங்க யோகம், , யோகம் போன்றவற்றில் ஈடுபடலாம். ஆனால் கடவுள் பக்தி இல்லாவிடில், மனதின் பொருள் உணர்வு என்ற நோய் நிற்காது.’
ஒளியின் பாதையைப் பின்பற்றும் யோகிகள் தங்கள் மனதை உலகத்திலிருந்து பிரித்து கடவுளிடம் இணைத்து, அதன் மூலம் நித்திய நலனைப் பெருகிறார்கள். இதன் விளைவாக, ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் மற்ற அனைத்து செயல்முறைகளாலும் அருளப்பட்டதை விட அதிகமான பலன்களை அறுவடை செய்கிறார்கள் என்று கூறுகிறார்.